• Skip to primary navigation
  • Skip to main content

Thamiziniyan

INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict.

  • Start Here
  • What I Read
  • Blog
    • Blog Elsewhere
  • Yours Scientifically Iniyan
  • WordPress Plugins
  • I’m an Introvert. But, Contact
  • Show Search
Hide Search
You are here: Home / History / வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…

வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…

November 25, 2010 | Leave a Comment

தனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான்.

பெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத் தானே குவித்து வைத்திருந்தான், அன்றைய அம்பானிபோல பெரிய மாளிகையில் வாசம், ஏராளமான பொன், பொருள் என்று வரலாறு இவனைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கிறது. பிராமணர்களுக்கு தாணமளிப்பது இல்லை, யாகம், வேள்வி எதுவுமில்லை. இதனாலேயே கூட இவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்து இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடவே, நந்த வம்சத்தவர்களுடைய பரம்பரையில் ஒரு சந்தேகம் இருக்கிறது, அவர்கள் சத்திரியர்கள் அல்ல என்பதுதான் அது. கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள். தாழ்ந்த குலம் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

இவ்விரு காரணங்களாலும், அன்றைய பார்ப்பனர்கள் நந்த வம்ச அரசர்களது மீது ஆரம்பத்திலிருந்தே பொருமிக் கொண்டிருந்தார்கள். யாகம், வேள்வி இல்லாததால் வருமாணம் இல்லை. கீழ்ச்சாதியைச் சேர்ந்த பயல்கள் அரசாள்வதா? எல்லாவற்றுக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்தனைச் செல்வத்தை ஒருவனே குவித்து வைத்திருக்கும்படி ஒருவன் வந்ததும் மக்களிடமும் வெறுப்பு தோன்றியது.

சாணக்கியன் / கௌடில்யன் / விஷ்ணுகுப்தன் என்ற பெயரில் ஒரு பார்ப்பணன், சந்திர குப்த மௌரியன் என்ற ஒரு வீரண் இருவரும் கைகோர்த்தார்கள்.

அலெக்சாண்டர், சிந்து நதிக்கரையின் ஓரமாய் வந்து காத்திருந்த நேரம், இந்தியப் பகுதிகளை விழுங்க. சாணக்கியனும், சந்திர குப்த மௌரியனும், நந்தர்களை வீழ்த்த அவனிடம் உதவி கேட்டு ஓடினார்கள். துரத்தியணுப்பிவிட்டான். அலெக்சாண்டர் மீது வெறுப்போடு கிளம்பினார்கள் இருவரும். தனநந்தனை கவிழ்த்தார்கள். மௌரிய சாம்ராஜ்யம் துவங்கியது. (அலெக்சாண்டர் இறந்தபிறகு, அலெக்சாண்டரது படைகளோடு போரிட்டு அவர் கைப்பற்றிய பல பகுதிகளையும் தன்னுடைய பேரரசோடு இணைத்துக் கொண்டான் சந்திரகுப்த மௌரியன்.)

இங்கே, கவணிக்க வேண்டிய இன்னொரு தகவல். சந்திர குப்த மௌரியனுக்கும் ஒரு கதை இருக்கிறது, அவனும் சத்திரியன் இல்லை. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனே. அவனுடைய வம்சவழியின் முன்னோர்கள் மீதும் பல கதைகள், தாழ்ந்தகுலத்தைச் சேர்ந்த தாய். மலைக்குடி வம்சம் என பல கட்டுக்கதைகள். எது உண்மையாய் இருந்த போதும், வருணாசிரம தர்மம் கெட்டது.

தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொண்டு நந்தர்களை வீழ்த்த ஏன் சாணக்கியன் முன்வந்தான். மீண்டும் சந்தேகங்கள் சாணக்கியன் என ஒருவன் இருந்தானா? அவனே எழுதியதாகச் சொல்லப்படும் அர்த்தசாஸ்திரத்தில் பல அமைச்சர்களுடைய பெயரைக் குறிப்பிட்ட போதும், தலைமை அமைச்சரான அவன் பெயரை ஏன் விட்டான்? மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சாணக்கியனின் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லையே ஏன்? இப்படி சாணக்கியனின் இருப்பின் மீதே சந்தேகங்கள். (அன்றைய நாளில் படைப்பின் கர்த்தா, தன் பெயரை குறிப்பிடாதது மரபாக இருந்தது. மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சிலவே கிடைத்திருக்கிறது. போன்ற காரனங்கள் சொல்லப்பட்டாலும், சாணக்கியனின் இருப்பின் மீதான சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது.)

நந்தர்களை எந்த காரணத்துக்காக பிராமணர்கள் எதிர்த்தார்களோ, அதே காரணத்துக்காக தன்னையும் எதிர்ப்பார்கள், இன்னுமொரு கலகத்தை விளைவித்து தன்னையும் தூக்கியெறிவார்கள், என்ற பயம் இருந்தது. சுற்றி மெய்க்காப்பாளர்கள், அத்தனை பேரும் பெண்கள். நாடு முழுக்க அத்தனை ஒற்றர்கள், பகலில் காக்கைகளைப் போலவும், இரவில் ஆந்தையைப் போலவும் ஒற்றர்கள் தங்கள் வேலையைச் செய்தார்கள். இரவிலும் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்கியிருந்திருப்பான் சந்திரகுப்த மௌரியன்.

Chandragupta Maurya and Bhadrabahu
Chandragupta Maurya and Bhadrabahu Jayanti Sengupta, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons

அவன் நினைத்தற்கேற்றபடி பிராமணர்கள் மௌரியர்கள் மீதும் அதே பொருமலோடு இருந்தார்கள். இடையில் சந்திரகுப்தன் சமணனாக மாறி தக்காணத்துக்கு சமணத்துறவி பத்ரபாகுவோடு வந்துவிட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அசோகர் பௌத்தத்துக்கு மாறியதும் எல்லோரும் அறிந்ததே. பிற்கால மௌரியர்களும் அடிக்கடி சமணத்துக்கும், பௌத்தத்துக்கும் மாறி மாறி விளையாடிக்கொண்டேயிருந்தார்கள். மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள், பிராமணர்கள்.

பிரஹதத்தன் என்னுமொரு பலமில்லாத ஒருவன் மௌரிய குலத்தில் வந்திருந்தான், அரசனாகவும் இருந்தான். புஷ்யமித்ரசுங்கன் என்னும் படைத்தளபதி பிரஹதத்தனை வெட்டிக் கொண்றான். மௌரிய வம்சம், கீழ்க்குலத்தோர் வம்சம் முடிந்தது. வர்ணாசிரமம் மீண்டும் உயிர்விட்டது. மௌரியர்கள் முடிந்தார்கள், சுங்கர்கள் வந்தார்கள். பௌத்தம் கீழ்நிலைக்கு வந்தது, வைதீக ஆட்சி மீண்டும் வந்தது.

வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையிலோ அல்லது பிற்போக்கான பாதையிலோ, முந்தையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டே திரும்பி நிற்கும்.
புஷ்யமித்ர சுங்கன் தோற்றுவித்த சுங்க வம்சத்தின் கடைசி அரசன், தேவபூபதி, அவனுடைய பிராமன அமைச்சர், வாசுதேவ கண்வர். அவனைக்  கொண்று வாசுதேவ  கண்வர், கண்வர்  வம்ச அரசைத் தோற்றுவித்தார்.
வரலாற்றின் (திரும்பும்) பாதையை பிராமணர்களே அன்றிலிருந்து தீர்மாணித்து வந்திருக்கிறார்கள்.

ஆதாரங்கள்:

  1. an advanced history of india- RC Majumdar, HC Raychaudhri, Kaikinkar Datta
  2. இந்திய வரலாறு – டாக்டர் ந.சுப்ரமண்யன்
  3. இந்திய வரலாறு பாகம் 1 –  பேராசிரியர். கோ.தங்கவேலு

Image : Jayanti Sengupta, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Common

Filed Under: History Tagged With: Alexander, Chanakya, Chandragupta Maurya, history

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thamiziniyan

Proudly Powered By WordPress and Genesis

  • Medium
  • Goodreads
  • Github
  • WordPress
  • Twitter